கல்வியைத் தேடி | ஆக்கம் : கலீல் பாத்திமா சிம்ஹா - Grade - 7A.

....கல்வியைத் தேடி....

பல தரப்பட்ட சூழ் நிலைகளில் பல்வேறுபட்ட மனிதர்களுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று போதிப்பது கல்வியாகும்.

...

இரண்டே இரண்டு கல்விகள் இருக்கின்றன. எப்படி வாழ வேண்டும் எப்படி பிழைக்க வேண்டும்; என்பதற்குரிய கல்வியாகும்..

...

ஓர் இனத்தின் எதிர்காலம் குழந்தைகளுக்கு கொடுக்கும் கல்வியினால் தீர்மானிக்கப்படும்.

...

கல்வி கற்பதன் நோக்கம் மதிப் பெண் பெறுவது அல்ல; 

நலம் பெறுவதே நோக்கமாக இருக்க வேண்டும்.!

....

நம்மை உயர்த்திக் கொள்ள சக்தி வாய்ந்த ஆயுதம் கல்வியே..

...

கல்வி ஒன்றுதான் நம்மை காப்பாற்றும் ..அதை கண்ணீர் சிந்தி கதறி அழுது கேள் இறைவனிடம்..

...

ربـي زدنـي عـلـمـا

றப்பி ஸித்னி இல்மா...

யா அல்லாஹ்!

எனக்கு கல்வி அறிவைத் தா!  என்று அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும்..

...

கல்வியின் அடிப்படை  மனிதனுக்கு விடுதலையை அருகில் கொண்டு வருவதாகும்..!

...

கல்வி! சிறந்த செயலாற்று சக்தியே அன்றி அறிவு பெறுவது மட்டுமன்று..

....

கல்வியை விட பயன் தரக் கூடியது கற்றபடி செயலாற்றுதல்.

செய்கையில் சிறந்த செயல் கடமையை நிறைவேற்றுவதாகும்......

கல்வியே உயிரிண் உணவு ..அஃதின்றேல் நம் சக்திகள் எல்லாம் செயலற்று நின்று விடும். பயனைத் தராது.

....

கல்வி என்பது கண் தெரியாதவர்களுக்கு ஒளியைக் கொடுப்பதல்ல..பார்வை உள்ளவர்களை ஒளியின் பால் அழைத்துச் செல்வதாகும்..

...


ஆக்கம்:-  கலீல் பாத்திமா சிம்ஹா

தரம் 07 A

கமு/ அல்ஹிலால் வித்தியாலயம் சாய்ந்தமருது.


Comments

Popular posts from this blog

இப்படியும் ஒரு மாணவன்.

இப்படியும் ஒரு மாணவன்.

இப்படியும் ஒரு மாணவன் ...

இப்படியும் ஒரு மாணவன்..

பிரதான தேர்தலுக்கு ஒப்பாக நடைபெற்ற சாய்ந்தமருது அல்- ஹிலால் மாணவ பாராளுமன்ற தேர்தல்.