Posts

Showing posts from November, 2022

இப்படியும் ஒரு மாணவன் ...

Image
பாடசாலை இரண்டாம் தவணைப் பரீட்சையில் மூழ்கிக்கொண்டிருந்தது. மாணவர்கள் பரீட்சை எழுதிக்கொண்டிருந்தனர். மாணவனொருவன்.. நேரான பார்வையுடன் . . திடமான நடையுடன் . . பாடசாலை முற்றத்திலுள்ள கொடிக்கம்பம் உள்ள பகுதியை கடந்து சென்றுகொண்டிருந்தான் . . விரைவாகச் செல்லும் கடுகதி பஸ்ஸொன்று சடுதியாக brake அடிப்பதைப்போன்று... வெறுமையாகக் கிடந்த bench ஐக் கடக்காமல் அப்படியே திடீரென நின்றான் . . . நின்ற கணத்திலே . . . அம் மாணவனின் கைகள் ஓரிரு பிடிகளாக மண்ணை அள்ளின . . . வெறுமையாகக் கிடந்த bench இல் ஏதோ கிறுக்கிச் சென்றான் . . . அவ் விடத்துக்குச் சென்று பார்த்தேன் . . . ஒரு முகத்தை  புன்முறுவலாக . . . நொடிப்பொழுதில் . . . ஆக்கமாக . . . மண்ணினால் . . அம் மாணவன் . . . வரைந்திருந்தான் . . .   அம் மாணவனை தொடர்ந்து சென்று . . . அம் மாணவனின் வகுப்புக்குச் சென்று . . . மாணவனைப் பாராட்டினேன் . . . அம் மாணவனின் பின்னணி . . . பற்றி வகுப்பாசிரியர் இவ்வாறு குறிப்பிட்டார் : "வகுப்பில் இயங்குநிலையிலுள்ள மாணவன், கற்றலிலும் சிறந்து விளங்கும் மாணவன்... இம் மாணவனின் பெற்றோரும் . . . பாடசாலைக்காக அர்ப்பணிப்புடன் உதவுபவர்க

தமிழன் பத்திரிகையில் பாடசாலை சம்பந்தமாக வெளியிடப்பட்ட செய்தி.

இரண்டாம் தவணைப் பரீட்சை நடந்துகொண்டிருக்கும் காலமிது. பரீட்சை நகர்வுகளில் பாடசாலை இயங்கிக்கொண்டிருந்தது. இவ்வேளையில்,  தமிழன்  பத்திரிகையில் (18.11.2022) எமது பாடசாலை தொடர்பான ஒரு செய்தி வெளியாகியிருந்தது.  அவ்வாறு அப்பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்திதான் என்ன ? ===================== தமிழன் பத்திரிகையில் வெளியான செய்தி. 👇🏻 வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மாணவர் ஒருவருக்கு பகிர்ந்து சாப்பிட தினந்தோறும் உணவு கொண்டுவந்து வழங்கி வருகின்ற முன்மாதிரிமிக்க மனிதாபிமான செயலைச் செய்துவரும் தரம் 5 இல் கல்வி பயிலும் மாணவி ஜே.எவ். இப்லா அதிபர் உட்பட அதிதி மற்றும் ஆசிரியர்களால் புடைசூழ பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.  இம்மாணவியின் சிறப்பான மனிதாபிமான முயற்சியைப் பாராட்டும் முகமாக சபையோரால் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்ட நிகழ்வு நேற்று சாய்ந்தமருது அல் - ஹிலால் பாடசாலையில் நடைபெற்றது. இவ்வுணவை தினந்தோறும் வழங்குவதற்கு உறுதுணையாக இருக்கின்ற அவரது பெற்றோரும் இதன்போது பாராட்டப்பட்டனர். இந்நிகழ்வுக்கு பொறியியலாளர் எம்.சீ.கமால் நிஸாத் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார். நடைபெறவிருக்கும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில்

தரம் - 4 - மாணவர்களின் சந்தை நிகழ்வு

Image
தரம் - 4 - மாணவர்களின் சந்தை நிகழ்வு பாடசாலையில் இடம்பெற்றது. இந்நிகழ்வை தரம் - 4 ஆசிரியர்கள் திறன்பட ஒழுங்கமைத்திருந்தனர். மாதிரி சந்தை ஒன்றை பாடசாலையில் நிகழ்த்திக்காட்டியதன் மூலம் சந்தை தொடர்பான அடிப்படை விடயங்களை நேரடி அனுபவங்களாக மாணவர்கள் பெற்றுக்கொண்டனர். உதவி அதிபர்கள், தரம் 4 பகுதித் தலைவர் மற்றும் தரம் 4 ஆசிரியர்கள், தரம் - 4 மாணவர்கள் ஆகியோர் மாதிரி சந்தைத் தொகுதி நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.  ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சந்தை நிகழ்வைப் பார்வையிட்டு பொருட்களையும் கொள்வனவுசெய்தனர்.  மேலும் புகைப்படங்களைப் பார்வையிட👉🏻 [ Click Here ]